பாளை கல்லூரி சார்பில் ஆதரவற்றோர் இல்லத்திற்கு மளிகை பொருட்கள் வழங்கல்
பாளை கல்லூரியின் மனிதம் அமைப்பின் சார்பில் ஆதரவற்றோர் இல்லத்திற்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் " மனிதம் " மாணவர் சேவை அமைப்பின் சார்பில் 20-04-2025 அன்று மாலை 5 மணியளவில் திருநெல்வேலி டவுண் மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்திற்கு ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மனிதம் சேவை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாதிக் அலி வரவேற்றுப்பேசினார். கல்லூரி துணை முதல்வர் முனைவர் ச.மு. அ செய்யது முகம்மது காஜா தலைமையுரை ஆற்றினார். வரலாற்று துறைத் தலைவர் முனைவர் அ . அப்துல் அஜீஸ், வாழ்த்திப் பேசினார். ஆதரவற்ற இல்லத்திற்கு ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி, சீனி, எண்ணெய் பருப்பு மளிகை பொருட்களை துணை முதல்வர் முனைவர் ச.மு. அ செய்யது முகம்மது காஜா வழங்கினார். முதுநிலை வணிகவியல் மாணவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வரின் நேர்முக உதவியாளர் சரவணவேல் நன்றி கூறினார். ஆதரவற்றோர் இல்லத்தின் முருகேசன், R -Soya தொண்டு நிறுவனத்தின் பொறுப்பாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்