ஆண்களுக்கான தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு
தமிழ்நாடு கிரி்க்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையிலான 14 வயது மற்றும் 16 வயதிற்கான ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி.தமிழ்நாடு கிரி்க்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு நடைபெறுகிறது.
14 வயதிற்கான வீரர்கள் அதாவது (01.09.2011) 16 வயதிற்கான வீரர்கள் அதாவது (01.09.2009) அன்றோ அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு வரும் 27.04.2025 ஞாயிறு அன்று தூத்துக்குடி எட்டாயாபுரம் ரோட்டில் அமைந்துள்ள சான் சான் கிரிக்கெட் அகாடமி பயிற்சி மையத்தில் (பஜாஜ் இருசக்கர வாகன showroom அருகில்) வைத்து காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் திரு J. கிறிஸ்பின் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்வில் கலந்துகொள்ளும் வீரர்கள் ( கிரிக்கெட் whites, விளையாட்டு உபகரணங்கள்) ஆதார் நகல் pdf, அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சய்ஸ் போட்டோ pdf, பிற்பபு சான்றிதழ் pdf வைத்துத்கொள்ள வேண்டும்.
தேர்வாகும் வீரர்கள் அனைவருக்கும் சிறப்பான பயிற்சி அளிக்கப்படும். மேலும் வரும் ஜுன் 2025 மற்றும் ஜூலை 2025 மாதத்தில் மதுரை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள், மேலும் விபரங்களுக்கு மாவட்ட செயலாளர் திரு J. கிறிஸ்பின் (8015621154) மாவட்ட இணைச்செயலாளர் சுப்பிரமணியன்( 8754004377) மற்றும் மாவட்ட துனைச்செயலாளர் SDR சாமுவேல்ராஜ்(9944833333) அவர்களை இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்