தூத்துக்குடியில் இளம்பெண் தற்கொலை
ஏப். 25, 2025 4:11 முற்பகல் |
தூத்துக்குடியில் குடும்ப பிரச்சனையில் மனடைந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியினை சேர்ந்தவர் ஆல்பர்ட் செபஸ்டின். இவரது மனைவி ஜெமினி கிமிலா (29). இவர்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந் நிலையில் ஜெமினி கிமிலா குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த 22-ந் தேதி தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இறந்த பெண்ணிற்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
கருத்துக்கள்