டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாளில் புதிய மாற்றம்
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், OMR விடைத்தாளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரிப் படிவமானது OMR Answer Sheet - Sample" எனும் தலைப்பில் தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
தேர்வர்கள் 4 இலக்க வினாத்தொகுப்பு எண்ணை அதற்குரிய வட்டங்களில் கருமை நிற பந்துமுனை பேனாவைப் பயன்படுத்தி கருமையாக்க வேண்டுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், OMR விடைத்தாளின் பக்கம்-1 பகுதி-II-இல், தேர்வர்கள் உறுதிமொழி அளித்து, கையொப்பமிட வேண்டும்.
மேலும், தேர்வாணையத்தால் நடத்தப்படவிருக்கும் இனிவரும் அனைத்து OMR முறை தேர்வுகளிலும் பங்கேற்க உள்ள தேர்வர்கள், புதிய மாதிரி OMR விடைத்தாளினை நன்கு பார்த்து அறிந்து கொண்டு தேர்வு எழுதுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், 2025-ம் ஆண்டுக்கான முதல் தேர்வாக குருப் 1 தேர்வி வரும் ஜூன் 15-ம் தேதி நடைபெற உள்ளது. அத்தேர்வில் இருந்து புதிய OMR தாள் பயன்படுத்தப்பட உள்ளது.
கடந்த குரூப் 4 தேர்வு முதல் ஓஎம்ஆர் தாளில் இன்வேலிட் மதிப்பெண் முறையை டிஎன்பிஎஸ்சி அறிமுகம் செய்தது. இந்த முறைப்படி ஓ.எம்.ஆர் தாளில் A, B, C, D மற்றும் E என 5 கட்டங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். கொள்குறி வகை (Objective Type) படி, வினாத்தாளில் 1 கேள்விக்கு 4 ஆப்ஷன்கள் இருக்கும், அதற்கு A, B, C, D என்பதில் சரியான விடை ஓ.எம்.ஆர் தாளில் நிரப்பப்பட வேண்டும். ஒருவேளை அந்த கேள்விக்கான பதில் உங்களுக்கு தெரியவில்லை என்றால், E என்ற வட்டத்தை நிரப்ப வேண்டும். அந்த கேள்விக்கான பதில் இன்வேலிட் என எடுத்துகொள்ளப்படும்.
தமிழக அரசு பணிக்காக காத்திருபவர்களுக்கு முக்கிய அறிவிப்பாக ஏப்ரல் 25-ம் தேதி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. அறிவிப்பு வெளியாவதைத் தொடர்ந்து, எத்தனை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது என்பது குறித்த விவரம் தெரியவரும்.
மேலும், இந்தாண்டு குரூப் 1, 2 மற்றும் 2ஏ, குரூப் 4 உட்பட மொத்தம் 7 போட்டித் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்படும்போது, அதற்கான காலிப்பணியிடங்கள் விவரங்கள் தெரிவிக்கப்படும்.
கருத்துக்கள்