advertisement

வாடிக்​கை​யாளர்​கள் பணம் 2 லட்​சம் மோசடி - வங்கி கிளை மேலா​ளர், எழுத்​தர் கைது

ஏப். 24, 2025 9:54 முற்பகல் |

மறைந்த வாடிக்​கை​யாளர்​களின் பணம் உட்பட வங்​கி​யில் இருந்து ரூ.23.48 லட்​சம் மோசடி செய்​த​தாக கிளை மேலா​ளர், எழுத்​தர் கைது செய்​யப்​பட்​டனர். 

இந்​தி​யன் வங்​கி​யின் சென்னை தெற்கு மண்டல மேலா​ளர் சத்​ய​நா​ராயணா, சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் கடந்த 8-ம் தேதி ஒரு புகார் கொடுத்​தார்.அதில் அவர் கூறி​யிருந்​த​தாவது: இந்​தி​யன் வங்​கி​யின் சாந்​தோம் கிளை மேலா​ள​ராக இருந்த வேளச்​சேரியை சேர்ந்த சுந்​தர் மோகன் மாஜி (47), வங்கி எழுத்​த​ராக (கிளார்க்) இருந்த மயி​லாப்​பூர் பஜார் ரோடு பகு​தியை சேர்ந்த ஜெய்​சிங் (57) ஆகிய இரு​வரும் வாடிக்​கை​யாளர்​களின் பணத்தை அவர்​களுக்கு தெரி​யாமலேயே அவர்​களது கையெழுத்தை போலி​யாக போட்டு எடுத்​தும், மறைந்த வாடிக்​கை​யாளர்​களின் வங்கி கணக்​கில் உள்ள பணத்தை கையாடல் செய்​தும், வாடிக்​கை​யாளர்​களின் அனு​மதி இன்று வங்கி கடன் பெறு​தல் உட்பட பல்​வேறு வகை​களில் வாடிக்​கை​யாளர்​களின் பணம் ரூ.23.48 லட்​சத்தை கையாடல் மற்​றும் மோசடி செய்​துள்​ளனர். அவர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு புகாரில் கூறி​யிருந்​தார்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement