advertisement

சேலம்,இராமநாதபுரத்தில் ஏப் 25 ல் மின்தடை அறிவிப்பு!

ஏப். 24, 2025 11:02 முற்பகல் |

 

தமிழகத்தில் பல்வேறு துணை மின் நிலையங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முழு நேர மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சேலம் மின் தடை பகுதிகள்:-

சேலத்தில் நாளை (25.04.2025) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தும்பிப்பாடி துணைமின் நிலைய பகுதிகளான சிக்கனம்பட்டி, ஆர்.சி. செட்டிப்பட்டி ஒருபகுதி, கோட்டமேட்டுப்பட்டி, ஓமலூர் நகர், பெரமச்சூர், பனங்காடு, தாராபுரம், குண்டூர், செம்மாண்டப்பட்டி, சிந்தாமணியூர், மயிலாம்பட்டி, கருப்பணம்பட்டி, பச்சனம்பட்டி, பஞ்சுகாளிப்பட்டி, பெரியப்பட்டி, செம்மனூர், சாத்தப்பாடி, எம்.என்.ஜி.பட்டி, வாலதாசம்பட்டி மற்றும் காமனேரி.

கே.ஆர்.தோப்பூர்

கே.ஆர்.தோப்பூர் துணைமின் நிலைய பகுதியான கோணகாபாடி, செம்மண்கூடல், கரியாம்பட்டி, கோவில்காடு ஆகிய பகுதிகளிலும்,தாரமங்கலம், முத்துநாயக்கன்பட்டி, கே.ஆர்.தோப்பூர், துணைமின் நிலைய பகுதிகளான துட்டம்பட்டி, தாரமங்கலம் நகர், ஆயமரத்தூர், தெசவிளக்கு மற்றும் சின்னப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.தும்பல் துணைமின் நிலைய பகுதியான தும்பல், இடையப்பட்டி, இடையப்பட்டி புதூர், நெய்யமலை, பனைமடல், குமாரபாளையம், கல்யாணகிரி, கல்லோரிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம், வேடுகத்தாம்பட்டி, தமையனூர், வைத்தியக்கவுண்டன்புதூர், சிங்கபுரம் துணைமின் நிலைய பகுதிகளான புதுப்பாளையம், செல்லப்பா நகர், முத்தம்பட்டி, பார்பர் காலனி, மண் நாயக்கன்பட்டி, பெரிய கிருஷ்ணாபுரம், சின்ன கிருஷ்ணாபுரம், மத்தூர், கொட்டவாடி,மேட்டுடையார்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள்.


உடையார்பட்டி

உடையாப்பட்டி துணைமின் நிலையத்தில் மன்னார்பாளையம், அம்.பாலப்பட்டி, தில்லை நகர், புத்துமாரியம்மன் கோவில், வாய்க்கால் பட்டறை, செங்கல் அணை, அய்யனார் கோவில் காடு, வீராணம் ரோடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement