தூத்துக்குடியில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற கோரி ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் எம்.எஸ். முத்து தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் வி. மாரியப்பன், நிர்வாகிகள் கே. ஆறுமுகம், எம்.கேஸ்ட்ரோ, ஆர்.இனிதா, எம்.ஆனந்த், ஜான்சன், எம். கிஷோர்குமார், ஆறுமுகம், ஜேம்ஸ், சசிகுமார், மனோகரன், வயணபெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், மதிமுக மாநகர செயலாளர் முருக பூபதி, மாவட்ட தலைவர் பேச்சிராஜ், மாவட்ட துணை தலைவர் செல்லச்சாமி, மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர் முகமது ஜான், தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், ஐஎன் எல் பி மாவட்ட தலைவர் எம்.காஷா முகைதீன் சிறப்புரை ஆற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராம்குமார் நன்றியுரை வழங்கினார்.
கருத்துக்கள்