advertisement

தூத்துக்குடி - டாஸ்மாக் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

ஏப். 10, 2025 7:17 முற்பகல் |

 


தூத்துக்குடியில் டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி  டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

21 ஆண்டுகளாக பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிநிரந்தரம், காலமுறை ஊதியம், பணி பாதுகாப்பு கோரியும், டாஸ்மாக்கில் மாற்றுத்திறனாளி பணியாளர்ளுக்கு பிறதுறையில் வழங்கும் சலுகைகள் வழங்கிட கோரியும், என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி  சிதம்பர  நகர், பஸ்நிறுத்தம் அருகில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் மரகதலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயல்தலைவர் முருகன் வரவேற்புரை ஆற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement