advertisement

தமிழகத்தில் நகராட்சி ஆணையர்கள் பணியிட மாற்றம்

ஏப். 18, 2025 5:47 முற்பகல் |


நகராட்சி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, புதுக்கோட்டை உள்ளிட்ட மண்டல மற்றும் நகராட்சிகளின் ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
  
அதன்படி சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரி செந்தில் முருகன் திண்டுக்கல் மாநகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை ஆணையராக சந்திரன், நாமக்கல் மாநகராட்சி ஆணையராக சிவகுமார் ஆகியோர் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மதுரை துணை ஆணையராக சித்ரா, திருவண்ணாமலை ஆணையராக செல்வ பாலாஜி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கும்பகோணம் ஆணையராக காந்தி ராஜ், சிவகாசி ஆணையராக சரவணன் காரைக்குடி ஆணையராக நாராயணன் ஆகியோரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பூர் துணை ஆணையராக மகேஸ்வரி, நெல்லை துணை ஆணையராக கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராக ராஜாராம் நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராக லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் வேலூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராக நாராயணனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement