ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஏப் 4 ல் விடுமுறை அறிவிப்பு
திருஉத்தரகோசமங்கையில் 04-ந்தேதி மகா கும்பாபிஷேகத்தையொட்டி ராமநாதபுரம் ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உள்ளூர் விடுமுறை அறிவித்து உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது :பொது (பல்வகை) துறை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணை எண்.1537 பொது(பல்வகை)த் துறை நாள்: 03.04.2025-ன்படி, ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோவில் மகாகும்பாவிஷேகம் விழா 04.04.2025 (வெள்ளிக்கிழமை) நடைபெறுவதால், அன்று ஒருநாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் , கல்வி நிறுவனங்களுக்கும் (அரசு பொதுத்தேர்வு கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில்) "உள்ளூர் விடுமுறை" ஆகவும், அதனை ஈடு செய்யும் பொருட்டு 10.05.2025 அன்று சனிக்கிழமை வேலை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாலணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், 04.04.2025 அன்று வெள்ளிக்கிழமை ஒருநாள் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் , அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்