advertisement

ஐபிஎல் தொடரின் முதல் போட்டி..! மழையால் பாதிக்கப்படுமா..?

மார். 22, 2025 4:15 முற்பகல் |

போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிக்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருக்க, கொல்கத்தா நகரில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வரும் நிலையில் இன்றும் "ஆரஞ்சு அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் தொடர் இன்று முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் உத்வேகத்தோடு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், முதல் கோப்பைக்கான தேடலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் களமிறங்குகின்றன. சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி, நீண்ட நாள்களுக்குப் பிறகு டி20 போட்டிகளில் விளையாடவுள்ளார். போட்டி கொல்கத்தாவில் நடைபெறுவதால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. இரண்டு அணிகளுக்கும் புதிய கேப்டன்கள் என்பதால், போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் முதல் போட்டிக்கு முன்பு சினிமா நட்சத்திரங்கள் திஷா பதானி, ஸ்ரேயா கோஷல் உள்ளிட்டோரின் பிரம்மாண்டமான கலைநிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிக்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருக்க, கொல்கத்தா நகரில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வரும் நிலையில் இன்றும் "ஆரஞ்சு அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளதால், போட்டி திட்டமிட்டப்படி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று இடைவிடாமல் மழை பெய்ததால் வீரர்கள் பயிற்சியிலும் ஈடுபடவில்லை.

போட்டி தொடங்கும் நேரமான இரவு 7.30 மணிக்கு 45 சதவீதம் மழை பெய்வதற்கான வாய்ப்பும், இரண்டாவது இன்னிங்ஸின் போது 65 சதவீதம் மழை பெய்வதற்கான வாய்ப்பும் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.லாம்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement