advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் மே 14ல் ஜமாபந்தி ஆரம்பம்

ஏப். 07, 2025 11:43 முற்பகல் |

 

தூத்துக்குடி மாவட்டத்தில்  வட்டாட்சியர் அலுவலகங்களில் ஜமாபந்தி மே 14ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 1434-ம் ஆண்டிற்கு வருவாய் தீர்வாய கணக்குகள் முடிவு செய்யும் பணி (ஜமாபந்தி) 14.05.2025 முதல் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் அவர்களுக்கெதிரே குறிப்பிடப்பட்ட நாட்களில் பிரதி தினம் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் 1434-ம் ஆண்டிற்கு வருவாய் தீர்வாய கணக்குகள் முடிவு செய்யும் பணி (ஜமாபந்தி) 14.05.2025 முதல் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் அவர்களுக்கெதிரே குறிப்பிடப்பட்ட நாட்களில் பிரதி தினம் காலை 10.00 மணிக்கு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. 

ஜமாபந்தி அலுவலர் மற்றும் நடைபெறும் நாட்கள்

1. ஓட்டப்பிடாரம் வட்டம் தூத்துக்குடி  மாவட்ட ஆட்சித் தலைவர், 14.05.2025 முதல் 27.05.2025 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)

2. எட்டயபுரம் வட்டம்: மாவட்ட வருவாய் அலுவலர் தூத்துக்குடி 14.05.2025 முதல் 27.05.2025 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)

3. சாத்தான்குளம் வட்டம்: தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நிஎ) (இஸ்ரோ) திருச்செந்தூர். 14.05.2025 முதல் 20.05.2025 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)

4. விளாத்திகுளம் வட்டம்: தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நிஎ) சிப்காட், அல்லிக்குளம், தூத்துக்குடி.  14.05.2025 முதல் 27.05.2025 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)

5. கயத்தார் வட்டம்: தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நிஎ) நெடுஞ்சாலைகள், தூத்துக்குடி 14.05.2025 முதல் 27.05.2025 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)

6. திருச்செந்தூர் வட்டம்: தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நிஎ)-1 தேசிய நெடுஞ்சாலை (திட்டங்கள்)தூத்துக்குடி. 14.05.2025 முதல் 21.05.2025 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)

7. ஸ்ரீவைகுண்டம் வட்டம்: தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நிஎ)-11 தேசிய நெடுஞ்சாலை (திட்டங்கள்) தூத்துக்குடி. 14.05.2025 முதல் 22.05.2025 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)

8. தூத்துக்குடி வட்டம்: வருவாய் கோட்டாட்சியர் தூத்துக்குடி 14.05.2025 முதல் 21.05.2025 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)

9. ஏரல் வட்டம்: வருவாய் கோட்டாட்சியர் திருச்செந்தூர் 14.05.2025 முதல் 23.05.2025 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக)

10. கோவில்பட்டி வட்டம்: வருவாய் கோட்டாட்சியர் கோவில்பட்டி 14.05.2025 முதல் 21.05.2025 முடிய (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக) 

பொதுமக்கள் தங்களது கோரிக்கை விண்ணப்பங்கள, அந்தந்த கிராமங்களுக்குரிய வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாளில், வருவாய் தீர்வாய அலுவலர்களிடம் கொடுத்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement