advertisement

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் கூட்டம்

ஏப். 07, 2025 11:36 முற்பகல் |

 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று (07.04.2025) நடைபெற்றது.

பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 972 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 75 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார். பின்னர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட தொகுதி - IV தேர்வில் வெற்றி பெற்ற 14 தேர்வர்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் ஒதுக்கீடுசெய்யப்பட்ட தட்டச்சர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை மாவட்டஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 2 நபர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 1 இலட்சம் வீதம் 2 இலட்சத்திற்கான காசோலைகள் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பத்திரிகைத்துறையினர் நலன் கருதி, பத்திரிகைத்துறையில் சுமார் 18 ஆண்டுகள் பணியாற்றி, 

பணிகாலத்தில் உயிரிழந்த 2 பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து குடும்ப உதவி நிதியாக தலா ரூ.3.75 இலட்சத்திற்கான காசோலைகள் என மொத்தம் 4 பயனாளிகளுக்கு ரூ.9.50 இலட்சத்திற்கான காசோலைகளையும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,64,900 மதிப்பிலான செயற்கை அவயங்களையும், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.94,500 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலிகளையும், 7 மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் தொடங்குவதற்கு வங்கிக்கடன் மானியமாக ரூ.1,66,500/-க்கான காசோலைகளையும் என மொத்தம் 36 பயனாளிகளுக்கு ரூ.13,75,900 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement