advertisement

சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு

ஏப். 07, 2025 9:42 முற்பகல் |

 

சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, நேரடி ஆட்சேர்ப்பு மூலம் சோப்தார், அலுவலக உதவியாளர், வீட்டு உதவியாளர், ரூம் பாய், தூய்மைப் பணியாளர், தோட்டப் பணியாளர், வாட்டர்மேன், சுகாதார பணியாளர் மற்றும் காவலர் ஆகிய பதவிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சோப்தார், அலுவலக உதவியாளர், வீட்டு உதவியாளர், தூய்மைப் பணியாளர், தோட்டப் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

பணியின் விவரங்கள்
பதவியின் பெயர்    காலிப்பணியிடங்கள்
சோப்தார்    12
அலுவலக உதவியாளர்    137
வீட்டு உதவியாளர்    87
ரூம் பாய்    4
தூய்மைப் பணியாளர்    73
தோட்டப் பணியாளர்    24
வாட்டர்மேன்    2
சுகாதார பணியாளர்    49
காவலர்    4
மொத்தம்    392
வயது வரம்பு
சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கும் இப்பணியிடங்களுக்கு 01.07.2025 தேதியின்படி, 18 வயது நிறைந்திருக்க வேண்டும். அதிகபடியாக 32 வயது வரை இருக்கலாம். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, ஆதரவற்ற விதவைகள் ஆகியவர்கள் அதிகபடியாக 37 வயது வரை இருக்கலாம்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கும் இப்பணியிடங்களுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அதிகபட்சமாக 12-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். உயர்கல்வியை பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக்கூடாது. 12-ம் வகுப்பிற்கு மேலாக எவ்வித உயர்படிப்பு படிக்கவில்லை/ உயர் படிப்பை தொடரவில்லை என்ற உறுதிமொழியை பதிவு செய்ய வேண்டும்.சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் நிரப்பப்படும் இப்பணியிடங்களுக்கு சம்பள நிலை-1 கீழ் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும்.

இப்பணியிடங்களுக்கு பொது எழுத்துத் தேர்வு, செயல்திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவற்றின் அடிப்படையில் விண்ணப்பதார்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கு தேர்தெடுக்கப்படுவார்கள். பொது எழுத்துத் தேர்வு தமிழ் தகுதித் தேர்வு கொண்டு மொத்தம் 65 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். 8-ம் வகுப்பு தரத்தில் தேர்வு நடைபெறும். செயல்திறன் தேர்வு மொத்தம் 40 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். சுத்தம் செய்தல், பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு திறன் பரிசோதனை நடைபெறும்.

தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு பின்பு தெரிவு பட்டியல் வெளியிடப்படும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு நீதித்துறை பயிற்சி மையம் ஆகிய இடங்களில் பணி நியமனம் வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்ற கணவரை இழந்த பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

முக்கிய நாட்கள்
விவரம்    முக்கிய நாட்கள்
விண்ணப்பிக்க கடைசி நாள்    05.05.2025
நேர்காணல்    பின்னர் அறிவிக்கப்படும்
சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் நிரப்பப்படும் இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் உடனே ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்களை அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement