advertisement

தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

ஏப். 03, 2025 6:40 முற்பகல் |

தூத்துக்குடியில் ஏஎஸ்பி மற்றும் உதவி ஆய்வாளரை  கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதன் மற்றும், தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்தமிழ் அரசன் பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள் கடந்த 2 நாட்களாக நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஏப் 3 ம் தேதி) வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு தலைமை வகித்தார். இதில் வழக்கறிஞர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement