advertisement

பவானி அருகே மகனுடன் தகராறில் ஈடுபட்ட தந்தை  மரணம்

ஏப். 21, 2025 10:30 முற்பகல் |

 

தந்தை-மகன் இடையேயான இந்த சிக்கல் மரணத்தில் முடிவடைந்த சம்பவம், அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

பவானி அருகே அத்தாணி, கருவல்வாடிபுதூர் பகுதியில் வசித்து வந்த முருகன் (வயது 55), கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வந்தவர். அவரது மகன் தேவேந்திரனுடன் கடந்த இரவு சில காரணங்களால் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தகராறுக்குப் பிறகு முருகன் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அருகிலிருந்தவர்கள் அவரை அத்தாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.இந்தச் சம்பவம் தொடர்பாக ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement