ராமநாதபுரம் மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் ஆட்சியரிடம் மனு
ராமநாதபுரம் மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை கண்டித்தும் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அகதிகளாக வருகை புரிந்த ரோஹிங்கியா முஸ்லிம் தீவிரவாதிகளை தடை செய்யக்கோரியும் சட்டரீதியாக அவர்கள் மீது எடுத்து இந்திய நாட்டில் இருந்து வெளியேற்றிட சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க கோரியும் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் மாவட்ட செயலாளர் ரமணன் தலைமையில் மாவட்ட ஆட்சியரின் மூலம் மனு அளிக்கப்பட்டு அந்த மனு குடியரசுத் தலைவருக்கு சென்றடைந்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க கோரி , மனு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர்.
கோட்ட அமைப்பு செயலாளர் இராம.சிவசாமி,மாவட்ட தலைவர் சரவணன்,மாவட்ட துணைத் தலைவர் விஜயா, மகளிர் அணி பொறுப்பாளர் கூரிபாண்டிசெல்வி,வழக்கறிஞர் ஸ்ரீதர், மாவட்ட பொறுப்பாளர் முருகேஸ்வரன் உட்பட பலர் உடனிருந்தனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்