”எங்க பாட்டுக்கு தானே காப்புரிமை கேட்குறோம்” காட்டமாய் விமர்சித்த கங்கை அமரன்!
“7 கோடி ரூபாய் கொடுத்த இசையமைப்பாளர்கள் போடும் பாடல் காதில் விழுவதே இல்லை” என இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரன் இதுகுறித்து காட்டமாக விமர்சித்துள்ளார். கங்கை அமரன் இசையமைத்த ’விட்ஃபா கீதம்’ பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவின்போது அவரிடம் காப்புரிமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், “7 கோடி ரூபாய் கொடுத்த இசையமைப்பாளர்கள் போடும் பாடல் காதில் விழுவதே இல்லை; அந்தப் பாடல்கள் ஹிட் ஆவதில்லை. எங்கள் பாடல்தானே அதில் வரவேற்பைப் பெறுகின்றன. அப்படி என்றால், அதற்கான கூலி எங்களுக்கு வரவேண்டும்தானே?
எங்களுக்குப் பணத்தாசை இல்லை; எங்களிடமே செலவு செய்ய முடியாமல் கொட்டிக்கிடக்கிறது. அனுமதி கேட்பதுதான் இங்கே அடிப்படை. அஜித் படம் என்றல்ல, எங்கள் இசை என்பதால்தான் கேட்கிறோம். உங்கள் இசையமைப்பாளரால் முடியவில்லை; எங்கள் பாடல்தான் உங்களை ஜெயிக்கவைக்கிறது என்ற சந்தோஷம்தான் எல்லாம். முடிந்தால் உங்கள் இசையமைப்பாளரை வைத்து அப்படி ஒரு பாடலைப் போடச்சொல்லுங்கள் என்றே ஊக்குவிக்கிறோம். நாங்கள் ஏன் அதற்கு உதவி செய்யவேண்டும்? நீங்கள் உழைத்து முன்னுக்கு வாருங்கள்” எனக் கடுமையாக விமர்சித்தார்.
கருத்துக்கள்